சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பியோடிய 5 சிறுமிகள்..! samugammedia

மீட்டியாகொட பிரதேசத்தில் சிறுவர் இல்லமொன்றில் இருந்த ஐந்து சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக மீட்டியாகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் சிறுமிகள் நேற்று (29) பிற்பகல் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய சிறுமிகள் 13, 14 மற்றும் 17 வயதுகளையுடையவர்கள் எனவும் படபொல, கொழும்பகேஆர, ஹிக்கடுவ, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுமிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *