புத்தளத்தில் டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுப்பு! samugammedia

புத்தளம் மாவட்டத்தில் டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு புத்தளம் நகரசபை டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த திட்டத்த்திற்கு புத்தளம் சுகாதார காரியாலயம் புத்தளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்கினர்.

புத்தளம் 11ம் வட்டாரமான தில்லையடி பகுதியில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையினால் அப்பகுதி வீடுகளுக்குச் சென்று இன்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது டெங்கு நுளம்புகள் உருவாகின்ற வீடுகளை இனங்காணப்பட்டு பொலிஸாரினால் வழக்குகள் பதிய செய்யப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *