கொத்துரொட்டி பிரியர்களுக்கு அதிர்ச்சி…! நள்ளிரவு முதல் அமுலுக்கு…!samugammedia

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் றைஸ் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்,

இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, சீனியின் விலையில் ஏற்பட்ட  அதிகரிப்பு காரணமாக தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் அரிசி, மரக்கறிகள் மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சோற்றுப் பாசல் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் பிரைட் றைஸ் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *