களுத்துறை – பண்டாரகமை பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்துக் கொண்டதில் சாரதி பலத்த காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தீக்குளித்தவர் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவர் குடும்பத் தகறாறு காரணமாக தீக்குளித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது சாரதியின் உடலில் பாரிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவரது முச்சரக்கரவண்டி முற்றாக தீக்கிரைகியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் ஹொரணை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்