ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க முடியாது…! உரிய நேரத்தில் தீர்மானம்…! நாமல் திட்டவட்டம்…!samugammedia

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வரையே தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பதை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு பலத்த கேள்வியுள்ளது. 

நாட்டுக்கு பொருத்தமான, பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார். 

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர் கொள்வதற்கு பெரமுனக் கட்சி தயார் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *