யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள்…! மதத்தலைவர்களுடனும் சந்திப்பு…!samugammedia

உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இன்றையதினம்(09)  காலை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

அதேவேளை ஏனைய மதத்தலைவர்களையும் இன்றையதினம் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *