
முன்னுரை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பலஸ்தீனம் அழிகிறது. ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் பெண்கள், குழந்தைகள், வயோதிபர், நோயாளிகள் என்ற பேதமின்றி இஸ்ரவேலின் கொலைவெறிக்குப் பலியாகின்றனர். அதன் கல்விக்கூடங்கள், வைத்தியசாலைகள், வணக்கஸ்தலங்கள், வீடுகள், பொதுநிர்வாக அலுவலகங்கள் யாவுமே இஸ்ரவேலின் குண்டுவீச்சுக்கு ஆளாகி குறிப்பாக காசா நகரும் அதன் சுற்றுப் பிரதேசமும் ஒரு மயானபூமியாக மாறிவிட்டது. அமெரிக்க ஆயுதங்களுடனும் மந்திர ஆலோசனையுடனும் மேற்குநாட்டுச் செய்தி நிறுவனங்களின்; திட்டமிட்ட இஸ்ரவேல் சார்பான பிரச்சாரத்துடனும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக வளைகுடா நாடுகளின் கேவலமான […]