ஆயிரக்கணக்கான கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – பொலிஸின் பெரும் பதவிகளில் மாற்றம்!

இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1877 இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

 இதேவேளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 19 பொலிஸ் அதிகாரிகளை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இடமாற்றம் செய்துள்ளார்.

அதன்படி ஒரு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், ஏழு பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் இரண்டு பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட மொத்தம் 19 அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *