பாதுகாப்பு கடமையிலுள்ள இராணுவத்தினர் மீளப்பெறல் – சபையில் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

 

 மிஹிந்தலை புனித பூமியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் மீள பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

இதன்படி, மிஹிந்தலை புனித பூமியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 251 காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் மீள பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு தரப்பினர் விரும்பவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *