கடும் மழை காரணமாக முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய சுண்டிக்குளம்! samugammedia

சீரற்ற காலனிலை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  புன்னைநீராவி   கிராம அலுவலர் பிரிவில் சுண்டிக்குளம் சந்தியூடாக கல்லாறு  சுண்டிக்குளம் கடற்கரை செல்லும்  பிரதான வீதி தற்பொழுது பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் வீதியை குருக்கருத்து பாய்வதன் காரணமாக வீதியால்  முதியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதே பகுதியில் சிலரது வீடுக்குள் வெள்ள நீர்  உட்புகுந்ததன் காரணமாக அயலவர்கள் வீட்டில் தங்கி இருப்பதாகவும் இன்று காலை தொடக்கம் மாலை வரை உணவு  தயாரிப்பதற்கு கூட முடியாத நிலையில்  சிறுபிள்ளைகளை வைத்துக்கொண்டு பெரும் அவதியுறுவதாகவும் வெள்ளம்  வழிந்து ஓட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் இது தொடர்பாக இன்றைய தினம் 11.12.2023 காலை கிராம அலுவலர் அவர்களுக்கு விடயம் தொடர்பாக  தெரிவித்திருந்தும் இன்று மாலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எமது பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *