ஜனாதிபதி ரணிலுக்கு சிங்கப்பூர் பிரதமர் அனுப்பிய கடிதம்..!

 

இலங்கையுடனான தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த தாம் உறுதிபூண்டுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயத்தின் போது, இடம்பெற்ற ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு தமது நன்றியை தெரிவிப்பதாக சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை விரைவில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *