திருகோணமலை நகரை இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை – சேருநுவர நகரில் இன்று புதன்கிழமை (13) மாலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மக்கள் போராட்ட இயக்கத்தினர் இதனை ஏற்பாடு செய்தனர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இலங்கையின் முக்கிய இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.