யாழில் திடீரென தீப்பற்றிய கடைத்தொகுதியால் பரபரப்பு..! samugammedia

யாழ்.மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடைத் தொகுதி தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தால்  கடைத் தொகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாக்கி உள்ளன.

அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *