அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்…!samugammedia

அதிவேக நெடுஞ்சாலையில்  வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூர இடைவௌியை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை இலத்திரனியல் முறையில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இருண்ட காலநிலை காரணமாக முன்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனங்களை இயக்குமாறு அதிவேக போக்குவரத்து பொலிசார் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *