கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட றிசாத் எம்.பி..!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட மத்திய குழு கூட்டம் கிண்ணியாவில் இன்று (16.12.2023) நடைபெற்றது.

 

முன்னாள் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில்  கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, கட்சியின் உயர் பீட உறுப்பினர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா உட்பட முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிண்ணியா அல்ஹிதாயா மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இடம் பெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலில்  மீனவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்ட மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் மீன்பிடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அடங்கிய மஹஜர் ஒன்றையும் மீனவர்கள் கையளித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *