நிலவும் சீரற்ற காலநிலை! 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!Samugammedia

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, களுத்துறை, காலி, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *