போதைவஸ்து மாத்திரை மற்றும் கூறிய ஆயுதத்துடன் ஒருவர் கைது..!

தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் இன்று 17.12.2023 தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய போதைவஸ்து மாத்திரைகள் மற்றும்  சிறிதளவு கஞ்சா நான்கு தொலைபேசிகள் போதைவஸ்துக்கு  பயன்படுத்தப்படும்  ஊசிகள் இரண்டு கூரிய  கத்திகள் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்வேறு குற்ற செயலுடன் தொடர்புபட்டு சிறை தண்டனை அனுபவிக்கப்பட்டு தற்பொழுதே விடுதலை ஆகி வந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளைய தினம்  18.12.2023 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *