திருமலையில் கனமழையால் கோயில் மீது விழுந்த மரத்தால் பாதிப்பு…!samugammedia

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக  பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் திருகோணமலையின் இலிங்கநகர் பாலமுருகன் ஆலய பின்புற மதில் இன்று (18)இடிந்து வீழ்ந்துள்ளது.

அதேவேளை பாலமுருகன் ஆலயத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது. 

அதேவேளை கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடைத் தங்கல் முகாம்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *