புத்தளத்தில் கரை ஒதுங்கிய 30 அடி நீளமுடைய புள்ளிச் சுறா மீன்…!Samugammedia

புத்தளம் தொடுவா கடலில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்குண்டு சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா ஒன்று உயிருடன் கரையொதிங்கியது.

புத்தளம் மதுரங்குளி தொடுவா பகுதியில் இன்று நண்பகல் மீனவர் ஒருவரின் வலையில் பாரிய புள்ளிச்சுறா மீனொன்று சிக்கி உயிருடன் கரையொதிங்கியிது.

இதன்போது குறித்த புள்ளிச் சுறா மீனை மீனவர்கள் பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் இயந்திரப்படகு உதவியுடன் மீண்டும் கடலில் விடுவித்ததாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சுறா மீன் சுமார் 30 அடி நீளமுடையது எனவும் சுமார் 2000 கிலோவிற்கும் அதிக எடையுடையதாக காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *