நாத்தார் மற்றும் புது வருட பண்டிகைகாலத்தை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்கால பண்டிகைகால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.

மன்னார் நகர சபையினால் கேள்வி கோரலின் அடிப்படையில் சுமார் 300க்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆம் தகதி முதல் எதிர் வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பண்டிகைகால வியாபார நடவடிக்கைகள் இடம் பெறும்.

தற்போது மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
மழை மற்றும் பொருளாதார நெருக்கடி மத்தியிலும் மக்கள் பண்டிகை கால பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.





