ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும்போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதி சிவஞானராஜா மகேஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடிப் பிரச்சினைக்கு யாரும் தீர்வு தருவதாக இல்லை. கடற்படையும் அதிகளவான படகுகளை பிடிப்பது கிடையாது. ஆகவே ஜனாதிபதி எமது பிரதிநிதிகளை சந்தித்து ஒரு தீர்வை எட்ட வழிசெய்ய வேண்டும் என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் வடக்கு மாகாணத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.





