அரசாங்கத்தினால் அறவிடப்படும் வரிகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியம்…! கோரிக்கை விடுத்த எம்.பி…!samugammedia

மக்களிடம் வசூலிக்கும் வரிப்பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பது தொடர்பில் முழுமையான அறிக்கையை மக்களுக்கு வழங்குமாறு கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் அறவிடப்படும் வரிகள் எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவான நம்பகத்தன்மை இல்லாத காரணத்தினால் இது தொடர்பில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த இவ்வாறான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது காலத்தின் பொருத்தமானது என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அவ்வாறான வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தினால் மக்கள் வரி செலுத்தும் முறைக்கு மிகவும் இணக்கமாக இருப்பார்கள்.

வரிப்பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது தொடர்பில் பத்திரிகை விளம்பரம் அல்லது நிதியமைச்சரின் அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *