நிலவும் சீரற்ற காலநிலை…!முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு…!samugammedia

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 9573 குடும்பங்களை சேர்ந்த 33,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது 

தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது 

பதுளை மாவட்டத்தில் 641 குடும்பங்களைச்சேர்ந்த 2143 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1078 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 87 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மொனறாகலை மாவட்டத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது 66 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 29 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 498 குடும்பங்களை சேர்ந்த 1339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது 753 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 5848 குடும்பங்களை சேர்ந்த 20378 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 4 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1985 குடும்பங்களை சேர்ந்த 7225 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 82 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 61 குடும்பங்களை சேர்ந்த 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 45 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 61 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 117 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளது.185 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

கண்டி மாவட்டத்தில் 226 குடும்பங்களை சேர்ந்த 861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 4 வீடுகள் முழுமையாகவும் 138 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது 58 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுர மாவட்டத்தில் 9 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 85 குடும்பங்களை சேர்ந்த 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குருனாகல் மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 57 குடும்பங்களை சேர்ந்த 232பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *