யாழ்ப்பாணத்தில் கொரோனா நடைமுறைகள்..! மக்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

 

யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் கொவிட் தற்பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா  மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயினால் ஒருவர் இறந்துள்ளார்.

எனவே யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். 

அதேபோல இந்த காலப்பகுதியில் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவது சாலச் சிறந்தது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *