பொலிஸாரின் யுக்திய விசேட நடவடிக்கை…! 1,133 பேர் கைது…! கைப்பற்றப்பட்ட முக்கிய பொருட்கள்…!samugammedia

போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  கடந்த 24 மணித்தியாலங்களில் 1,133 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று(6) காலை அறிவித்துள்ளது.
இதன்போது 405 கிராம் ஹெரோயின், 1.7 கிலோ கிராம் ஐஸ், 4.7 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 1946 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய  விசேட நடவடிக்கைக்கு பொதுமக்களிடமிருந்தும் வரவேற்பு  கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *