கிழக்கில் இடம்பெற்ற மாபெரும் பாரம்பரிய படகோட்டப் போட்டி..!

கிண்ணியா பாலத்தருகில் மாபெரும் பாரம்பரிய படகோட்டப் போட்டி இன்று (06)மாலை இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த குறித்த போட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.

கிண்ணியா துறையடி கடற்பகுதியில் இருந்து கிண்ணியா பூங்கா வரை கடல் வழியாக இப் படகோட்டப் போட்டி இடம் பெற்றது.

பாரம்பரிய விளையாட்டின் ஒரு பகுதியாக படகோட்டப் போட்டி இடம்பெற்றமை வரவேற்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இவ் படகு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், ஏ.எல்.எம்.அதாவுள்ளா,

கபில நுவன் அதுகோரள, இந்திய உயர்ஸ்தானிகர் ஆலய துணைத் தூதுவர் வெங்கடேஷ் உட்பட மாகாண திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *