திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு…!samugammedia

திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் யாழ்பபாணம் போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவத்தில் அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராசா விஜயராணி (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணுக்கு கடந்த 28 ஆம் திகதி  திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூளையில் இரத்தக் கட்டி உறைந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *