கிளிநொச்சியில் திடீர் சோதனை நடவடிக்கை – 5 டிப்பர் வாகனங்களுடன் சிக்கிய சாரதிகள்..!

 

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு மற்றும் மயில்வாகரபுரம் பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 5 டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்க அமைய வீதி சோதனைகளின் மூலம் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் விசாரணைகளின் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *