சண்டிலிப்பாயில் வீடு ஒன்றில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மர்மக்குழு…!samugammedia

நள்ளிரவு 12.00 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய், சங்குவேலி தெற்கு  பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வன்முறைக்குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்திவிட்டு, வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TVS அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *