பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக இராஜதுரை நியமனம்…!samugammedia

பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சிரேஷ்ட சட்டதரணி பி.இராஜதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் இன்று (10.01.2024) வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தவிசாளரான பி.இராஜதுரை இதற்கு முன்னர் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *