இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்…! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு…!samugammedia

 வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் லேசான மழை பெய்யும்.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

தீவின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *