நிலவும் சீரற்ற காலநிலையால் 682 பேர் பாதிப்பு…! இடர் முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு…!samugammedia

நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடரும் சீரற்ற காலநிலையால் 186 குடும்பங்களை சேர்ந்த 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பதுளை மாவட்டத்தில்  2150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1064 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 74 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில்  61 குடும்பங்களை சேர்ந்த 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2 வீடுகள் பகுதியவில் சேதமடைந்துள்ளது 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவிலும் 1வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 36 குடும்பங்களை சேர்ந்த 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1620 குடும்பங்களை சேர்ந்த 5237 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 51 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 50,996 குடும்பங்களை சேர்ந்த 169,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 187 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. 1 நபர் காயமடைந்துள்ளார.; 7143 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை 186 குடும்பங்களை சேர்ந்த 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் முழுமையாகவும் 2 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

முல்லைத்தீவு 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுர மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகள் முழுமையாகவும் 3வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *