மின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! நாய்களை விட்டு அச்சுறுத்திய இராணுவ சிப்பாயின் மனைவி..!

மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை தடுத்து வைத்து நாய்களை வைத்து அச்சுறுத்தியதாக கூறப்படும் இராணுவ சிப்பாயின் மனைவி உட்பட மற்றுமொருவரை மொரந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மொரந்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

இராணுவ சிப்பாயின் மனைவி மற்றும் தாய் ஒன்றாக வசித்து வருவதுடன், அவர்களது வீட்டிற்கு அருகிலேயே இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரியின் வீடும் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி ஜப்பான் நாட்டில் வசிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் வசிக்கும் இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரியின் வீட்டு மின்சாரத்தை துண்டிப்பதற்காக 4 மின்சார சபை ஊழியர்கள் வந்துள்ளனர்.

இராணுவ சிப்பாயின் தாய் மின்சார சபை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து,

இரு ஊழியர்கள் மாத்திரமே வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றைய ஊழியர்கள் அவர்கள் பயணித்த வாகனத்தில் இருந்துள்ளனர்.

வீட்டிற்குள் வந்த ஊழியர்கள் இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி வீட்டு மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

இதனையடுத்து இராணுவ சிப்பாயின் மனைவி தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி இணையவழி மூலமாக ஏற்கனமே மின்சார கட்டணத்தை செலுத்தி விட்டதாக கூறி கட்டண சீட்டின் புகைப்படத்தை கையடக்கத் தொலைபேசிக்கு  அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் இராணுவ சிப்பாயின் மனைவி ஊழியர்களிடம் கூறியும் அவர்கள் அதனை தவிர்த்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த இராணுவ சிப்பாயின் மனைவி ஊழியர்களை அடைத்து வைத்து துண்டித்த மின்சார இணைப்பை மீண்டும் வழங்குமாறும் இல்லையெனில் நாய்களை வைத்து கடிக்க செய்வதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *