ஆசையை தூண்டி லட்சக்கணக்கில் ஆப்பு வைத்த மர்ம நபர் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை..!!

இணையத்தில் பணம் முதலீடு செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட  ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இணையத்தில் பணத்தை முதலீடு செய்வதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என்பதுடன் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *