சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! அநுரவின் அரசியலுக்கு பச்சைக்கொடி காட்டிய முக்கிய எம்.பிக்கள்..!

 

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு எதிராக முதலில் அரசியல் கூட்டணியை உருவாக்க ஜேவிபி இருக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் அவ்வாறானதொரு கூட்டணியை அமைப்பதற்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே காரணம் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரான முகாமில், ஜேவிபி அதிக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதுடன், ஜனரஞ்சக அரசியலைக் கட்டியெழுப்புவதில் அக்கட்சி கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply