மகிந்தவின் இல்லத்திற்காக மில்லியன் செலவில் மின் உற்பத்தி இயந்திரம் கொள்வனவு..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்காக மின்சார சபையிடமிருந்து 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய வாட் வரி சேர்க்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர்  ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

இந்த மின் உற்பத்தி இயந்திரத்தை அந்த வீட்டிற்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐம்பது மில்லியனுக்கும் குறைவான மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின் சில முதுகெலும்பில்லாத அதிகாரிகள் அதற்கேற்ப கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த இயந்திரம் 220 திறன் கொண்டதாகவும், பழைய VAT 15% வரியே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *