யுக்திய நடவடிக்கையில் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்…! மீட்கப்பட்ட முக்கிய பொருள்…!samugammedia

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கையின் போது  ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெபட கணேபொல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, ​​அவரிடம் இருந்து 2,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படிஇ சந்தேகநபர் மோதர பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை  மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *