இலங்கைக்குள் மீண்டும் நுழையும் இந்திய இராணுவம் – பகீர் தகவல்..!samugammedia

திருகோணமலை மாவட்டம் இந்தியாவின் பிரகடனப்படுத்தப்படாத ஒரு மாநிலமாக மாறி உள்ளது. அதற்கு அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம் என்றும் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

திருகோணமலையை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியா வடக்கையும் கொழும்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது. மாலைதீவு விவகாரத்தில் சீனா தனது வலுவான இடத்தைக் கைப்பற்றி உள்ளமை இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

எனவே அதற்கு பதிலாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply