
இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் மீதான சமவாயத்தின் அரச தரப்பில் ஒன்றாக, சர்வதேச நீதிமன்றத்தின் முன் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடுக்கும் வகையில் தென்னாபிரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆதரிப்பதாக இலங்கையிலுள்ள சுமார் 40 சிவில் சமூக அமைப்புகள், வலையமைப்புகள் மற்றும் ஒன்றியங்கள் ஆதரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.




