ஹற்றனில் யுக்திய நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு…!samugammedia

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு அட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தில் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தலைமையில் இன்று நடைபெற்றது.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், நோர்வூட், பொகந்தலாவ, மஸ்கெலியா, நல்லதண்ணி, நோர்டன் பிரிட்ஜ், கினிகத்தேனை, வட்டவளை, பொல்பிட்டிய ஆகிய காவல் நிலையத்தில் கடமை புரியும் 27 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரூபா ஒரு இலட்சத்து 18ஆயிரம் ரூபா காசோலையும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நீதியின் செயற்பாட்டில்(யுக்திய) ஈடுபட்டுள்ள அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பாராட்டும் முகமாகவும், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *