தலைவர் சிறீதரனுக்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு…!

 

ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மிகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் சிறீதரனுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்றும் சக தலைமைப்பதவிப் போட்டியாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சித் தலைவருக்கான தேர்தலிலே மிக ஆரோக்கியமாக, எமது கட்சி உட்கட்சி ஜனநாயகத்தினை நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நடாத்திக்காட்டியிருக்கின்றது.

இதிலே வெற்றிபெற்ற  நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தப் பயணத்திலே நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம். இதை நாம் இருவரும் தேர்தல்காலத்திலும் தெளிவாக மக்களுக்குச் சொல்லியிருக்கின்றோம்.

ஆகவே எனது முழுமையான ஆதரவினை தற்போது ஜனநாயக முறையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள, தலைவர் சிறீதரனுக்கு முழுமையாக வழங்குவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *