பாடசாலைகளில் விழாக்கள் நடத்த தடை..! வெளியானது விசேட சுற்றறிக்கை..!

 

பாடசாலைகளில் விழாக்களை நடத்துவதை மட்டுப்படுத்துமாறு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோரிடம் பணம் வசூலிப்பதாக வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண சபையினாலும் நிர்வகிக்கப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றறிக்கையின் பிரகாரம் முதலாம் தவணையில் மூன்று விழாக்களும் இரண்டாம் தவணைகளில் நான்கு விழாக்களும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், 

கூடுதலாக ஏதேனும் விழா நடத்தினால் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும்.

முதல் பருவத்தில் பிள்ளைகள் சேர்க்கை விழா, சுதந்திர விழா, இல்லங்களுக்கு இடையேயான தடகள விழாவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத்தில் கல்விச் சுற்றுலா, கலை விழா, வண்ண விழா, ஆண்டு பரிசளிப்பு விழா நடத்தவும் அனுமதி வழங்கப்படும்.

இசை நிகழ்ச்சிகள், ஆசிரியர் தின விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி பெற்றோர்களிடம் இருந்து அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வரம்பில்லாமல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *