நாட்டில் மாகாண சபைத் தேர்தல் கட்டாயம் – சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்..!samugammedia

நாட்டில் மாகாண சபைத் தேர்தல் கட்டாயமாக நடாத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் நேற்றையதினம் (23.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம். மேலும், தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, உட்பட தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். 

அத்துடன், நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் 13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிய்வத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *