நிகழ்நிலை காப்பு சட்டம் அடக்குமுறைக்காகவே கொண்டுவரப்பட்ட சட்டம்…! சம்பிக்க எதிர்ப்பு…! samugammedia

சமூக ஊடக ஒழுங்கு முறைச் சட்டம் ஒழுங்குபடுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமல்ல,  அடக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட சட்டம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசு முதலில் வரி வருவாயை வசூலிக்கும் செயல்முறையை வலுப்படுத்த வேண்டும் என்றும், பின்னர் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வெளிநாட்டு வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கு சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டம் தடையாக உள்ளதாகத் தெரிவித்த ரணவக்க, சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *