கொழும்பின் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்பு…!samugammedia

கொழும்பு கொம்பனித்தெரு எல்டெயார் நவீன அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் தோட்டத்தை சுத்தம் செய்யச் சென்ற தொழிலாளி ஒருவர் குறித்த வெளிநாட்டவர் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட ஊழியர் இது தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் வரும் வரை சடலத்தை பொலிஸ் பிரேத அறையில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்றையதினம் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *