ஆண் பிள்ளைகள் துஷ்பிரயோகம் – குற்றமாக அங்கீகரிக்க அமைச்சரவை தீர்மானம்..!samugammedia

ஆண் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வது குற்றமாக்குவது உள்ளிட்ட திருத்தப்பட்ட தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலாத்காரச் சட்டங்களில் திருத்தம் செய்யவும், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *