மக்களே அவதானம்…! வடக்கு கிழக்கில் மீண்டும் கனமழை…! சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!samugammedia

நாளை(26) வெள்ளிக்கிழமை வவுனியா,  முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை (27)  முதல்  எதிர்வரும்31 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

எனவே, அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இந்த நாட்களில் அறுவடை செய்தல், காயவிடுதல் போன்ற நடவடிக்கைகளை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *