டிசம்பர் மாதம் 26 ம் திகதி பௌர்ணமி நாளில் சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக சிவனடி பாத மலைக்கு பெருமளவில் பக்தர்கள் வருகை தரவில்லை.

கடந்த காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவிகையில் நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை சுமார் 5000 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் யாத்திரிகர்கள் அதிக அளவில் வரக் கூடும் எனவும் பாதுகாப்பு பணியில் அதிகளவில் பொலிசாரை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சில நாட்களாக அதிகளவில் பகல் நேரத்தில் வெப்பநிலை தோன்றுவதுடன் இரவு, அதிகாலை வேளையில் கடுமையான பணி வாடை வீசுவதால் யாத்திரிகர்கள் இவ் வேளையில் மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனால் உயர் ஆபத்து ஏற்படலாம் என அவ்வப்போது அறிவுறுத்தல் வழங்கபட்டு வருகிறது.
மலையக பகுதிகளில் உள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது ஆகையால் நீர் தேக்க பகுதிகளில் நீராட வேண்டாம் என கேட்டுக் கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.




