முல்லைத்தீவு பட்டத் திருவிழாவில் ஏறிய பட்டத்தால் பரபரப்பு….! இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை….! நடந்தது என்ன? samugammedia

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா நேற்றையதினம்(28)  மாலை இடம்பெற்றிருந்தது.

யாழ் வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்பவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம்(28) பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக இடம்பெற்றிருந்தது. 

அதில்,  பல்வேறு வடிவங்களில் பட்டங்களை உருவாக்கி  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.

குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞனொருவர் தனது பட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார். 

இதனை அவதானித்தாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply