தாமரைக் கோபுரத்திற்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்…!samugammedia

தாமரைக் கோபுரத்தினை  50,000 வெளிநாட்டவர்கள் பார்வையிட்டுள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50ஆயிரமாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

கொழும்பு தாமரைக் கோபுரம் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதிலிருந்து நேற்று(01) வரையான காலப்பகுதியில் மட்டும் 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளனர். 

கொழும்பு தாமரைக் கோபுரம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி அங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply